

அமிர்தசரஸில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர்.
பஞ்சாப் மாநிலம், முலே சக் மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றின் மேற்கூரை இன்று அதிகாலை இடிந்து விழுந்தது. அப்போது வீட்டினுள் தூங்கிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி பலியாகினர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் 4 பேரின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமிர்தசரஸ் பகுதியில் பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.