ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது ஏன்? - மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

News image
Updated On :15 மார்ச் 2020, 9:26 am

DIN

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பதன் மூலம், உலகளாவிய எண்ணெய் விலை வீழ்ச்சியின் பயன் இந்திய நுகர்வோருக்கு சென்று சேர வேண்டும் என பிரதமரிடம் கடந்த 3 நாட்களுக்கு முன்னதாகக் கூறியிருந்தேன். ஆனால், பிரதமரோ அதற்கு மாறாக எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளார்' என்று குற்றம் சாட்டியுள்ளார். 

முன்னதாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் எரிபொருள் உயர்வுக்கு எதிராக, 'சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தபோதிலும், எரிபொருள் விலையை குறைக்க மத்திய அரசு தவறியது ஏன்?' என்று கேள்வி எழுப்பினார்.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ .2 மற்றும் செஸ் வரி தலா ரூ. 1  என பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தி மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.