சபரிமலையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் வரத்தே இல்லாததால் நடைபாதை மற்றும் சன்னிதானத்தில் பக்தர்கள் நடமாட்டம் இல்லாத நிலையே இருந்தது.
பொதுவாக சபரிமலையில் விடுமுறை நாட்களில் நடைதிறந்து இருந்தால் பக்தர்கள் வருகை அதிகளவில் இருக்கும். எப்போதும் பக்தர்கள் சரணகோஷம் செவிகளில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும். சனிக்கிழமை மாலைமுதல் பக்தர்கள் வரத்து அதிகளவில் காணப்படும். நடைபாதையில் பக்தர்கள் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்.
ஆனால், இதற்கு நேர்மாறாக இந்த ஞாயிற்றுக்கிழமை சபரிமலையில்
பக்தர்களின் வருகை நூறு எண்ணிக்கையில் மட்டுமே இருந்தது. பம்பை - நீலிமலையேற்றம் - அப்பாச்சிமேடு - சன்னிதானத்தில் மிக அமைதியான சூழ்நிலையே நிலவியது. கடைகள் அனைத்தும் மூடியிருந்தன. சபரிமலையில் நடை அடைக்கப்பட்ட காலம் போன்ற காலநிலையே நிலவியது.
இதனிடையே, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பகலில் சோபன மண்டபத்தில் 25 கலசங்களில் புனித நீர் நிரப்பி பூஜை செய்து ஐயப்பனுக்கு கலசாபிஷேகம் நடத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


