அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

இந்த நாள் நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்குமானது: நிர்பயாவின் தந்தை

7 ஆண்டுகளுக்குப் பிறகு நிர்பயா குற்றவாளிகள் நால்வரும் திகார் சிறையில் இன்று தூக்கிலிடப்பட்டனர். இந்த நாள் நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்குமானது என்று நிர்பயாவின் தந்தை கூறியுள்ளார்.

News image
Updated On :20 மார்ச் 2020, 10:52 am IST


புது தில்லி: 7 ஆண்டுகளுக்குப் பிறகு நிர்பயா குற்றவாளிகள் நால்வரும் திகார் சிறையில் இன்று தூக்கிலிடப்பட்டனர். இந்த நாள் நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்குமானது என்று நிர்பயாவின் தந்தை கூறியுள்ளார்.

இது நிர்பயாவுக்கு மட்டுமில்லை, நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்குமான நாள் இது. இன்று நாட்டில் உள்ள அனைத்து மக்களுமே மகிழ்ச்சியோடு சொல்கிறார்கள், நிர்பயா சம்பவத்தில் நீதி கிடைத்துவிட்டது என்று. அனைத்து நேரத்திலும் எங்களது வழக்குரைஞர் எங்கள் பக்கம் நின்றார். இறுதியாக நாம் வெற்றிபெற்றுவிட்டோம் என்று நிர்பயாவின் தந்தை பத்ரிநாத் சிங் கூறியுள்ளார்.

மேலும் இது குறித்துப் பேசிய நிர்பயாவின் தாய் ஆஷா தேவி, நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் ஒரு முறையீடு செய்யவிருக்கிறோம், இதுபோன்று தூக்கு தண்டனை பெற்ற குற்றவாளிகள் தங்களது தண்டனையை தள்ளிப் போட மீண்டும் மீண்டும் முயலும் சம்பவம் வருங்காலங்களில் நடக்காத வண்ணம் தடை செய்ய கொள்கை முடிவுகளை வகுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோர உள்ளோம்.

இனி, ஒரு குற்றவாளி மறுசீராய்வு மற்றும் கருணை மனுவை ஒன்றாகவோ அல்லது தனியாகவோ ஒரே நேரத்தில் மட்டுமே தாக்கல் செய்யும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நிர்பயாவின் தாய் ஆஷா  தேவி கூறியுள்ளார்.

நிர்பயா குற்றவாளிகள் நால்வரும் இன்று காலை 5.30 மணியளவில் திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.