மும்பை: ரிசர்வ் வங்கி ஊழியர்களில் சுமார் 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், பொருளாதார நடவடிக்கைகளில் மக்களின் நலனுக்காக எடுக்கப்பட்டிருக்கும் முக்கிய அறிவிப்புகள் குறித்து ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் மும்பையில் இன்று அறிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, கரோனா பாதிப்பினால் ஏறப்ட்ட பொரளாதார நிலையை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ரிசர்வ் வங்கி ஊழியர்களில் சுமார் 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டுளள்னர் என்று தெரிவித்தார்.