புது தில்லி: சமையல் எரிவாயு உருளை விலை தொடர்ந்து மூன்றாவது முறையாக இன்று ரூ.160 குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்ட நிலையில், இந்த மாதமும் சமையல் எரிவாயு உருளை விலையை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலைக்குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதன் மூலம் சென்னையில் சமையல் எரிவாயு உருளை விலை ரூ.160 குறைந்து ரூ.569.50க்கு விற்பனை செய்யப்படும்.
அதேபோல, தில்லியில் சமையல் எரிவாயு விலை ரூ.744ல் இருந்து 581.50க்கும், மும்பையில் ரூ.579க்கும், கொல்கத்தாவில் ரூ.584.50க்கும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் சமையல் எரிவாயு உருளையின் தேவை 20% அதிகரித்திருப்பதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜாதி, மதம் அற்றவா் என்பதை தெரிவிக்க சான்று அவசியம் இல்லை: உயா்நீதிமன்றம் கருத்து

தேவகோட்டை அருகே மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்

காளையாா்கோவில் செம்மண் முற்றத்தில் உலக புத்தகத் தின விழா
முதியவா் வீட்டில் நகை, பணம் திருட்டு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


