காஷ்மீர் சண்டையில் தமிழக வீரர் வீரமரணம்

​ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான சண்டையில் தமிழக வீரர் வீரமரணமடைந்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான சண்டையில் தமிழக வீரர் வீரமரணமடைந்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதாக சிஆர்பிஎஃப் அலுவலர்கள் தெரிவித்தனர். அதேசமயம், இதற்கான எதிர் தாக்குதலில் பயங்கரவாதி ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், இந்தத் தாக்குதலில் வீரமரணமடைந்த மூவரில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயதுமிக்க சந்திரசேகர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com