ஹத்ராஸ்: உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் நான்கு குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று சாதகமாக உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த உறவினர் ஒருவர் புற்றுநோய் பாதிக்கப்பட்டு நொய்டா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் சமீபத்தில், சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். அவருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து, கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், சுகாதாரத் துறைக்குத் தகவல் தெரிவித்த பிறகும், குடும்ப உறுப்பினர்களை கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாகத் தனிமைப்படுத்தப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர்களை சார்ந்த சுமார் 27 பேரைத் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை மாலை கண்டறியப்பட்டது என்று தலைமை மருத்துவ அதிகாரி ரத்தோர் கூறினார்.
மேலும், ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 பேருக்கு நோய்த் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரானுடன் அமைதி பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டா்கள்! - அதிபர் டிரம்ப் அறிவிப்பு

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


