திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கேரளத்தில் புதிதாக 29 பேருக்கு கரோனா தொற்று: பினராயி விஜயன்

​கேரளத்தில் புதிதாக 29 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :19 ஆகஸ்ட் 2020, 10:42 am

DIN


கேரளத்தில் புதிதாக 29 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பற்றிய சமீபத்திய அறிவிப்புகளை வெளியிடுவதற்காக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது அவர் பேசுகையில், "கேரளத்தில் புதிதாக 29 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 630 ஆக உயர்ந்துள்ளது. இதில் 130 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக பாதிப்புக்குள்ளாகியுள்ள 29 பேரில் 21 பேர் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள், 7 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். ஒருவருக்கு தொடர்பில் இருந்ததன்மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது." என்றார்.

இதையடுத்து, கட்டுப்பாடு தளர்வுகள் பற்றி பேசிய அவர், "வணிக வளாகங்கள் சுழற்சி முறையில் 50 சதவீத கடைகளுடன் செயல்படலாம். முடி திருத்தகங்கள் மற்றும் அழகு நிலையங்கள் குளிர்சாதனக் கருவிகள் இல்லாமல் செயல்பட வேண்டும். முடி திருத்தம் மற்றும் முகம் மழித்தலுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இணையவழி விற்பனைக்கான தளம் தயாரான பிறகு அரசு நடத்தும் மதுக்கடைகள் திறக்கப்படும். மதுக்கூடங்களில் வீட்டிற்கு வாங்கிச் செல்ல மட்டும் அனுமதி." என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.