எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருமணத்துக்காக வைத்திருந்த பணத்தை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு செலவிட்ட ஆட்டோ ஓட்டுநர்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த ரூ.2 லட்சத்தை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவளிக்க செலவழித்து வருகிறார் புணேவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்.

News image
Updated On :18 மே 2020, 10:38 am

DIN


புணே: திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த ரூ.2 லட்சத்தை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவளிக்க செலவழித்து வருகிறார் புணேவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்.

அதோடு நிற்கவில்லை ஆக்சய் கோத்வாலே (30). தனது ஆட்டோவில் கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வருகிறார்.

ஊரடங்கால் மே 25ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த தனதுதிருமணம் தள்ளிப் போனதால் அக்சய் கவலைப்படவில்லை. தனது திருமண செலவுக்காக சேர்த்து வைத்திருந்த ரூ.2 லட்சத்தை, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவளிக்க செலவிட்டு வருகிறார்.

தனது நண்பர்களுடன் சேர்ந்து தினமும் சுமார் 400 பேருக்கு அக்சய் உணவளித்து வருகிறார். இதுபோன்றதொரு மோசமான சூழ்நிலையில், இல்லாதவர்களுக்கு தன்னால் இயன்றதை உதவ முடிந்ததே என்று நினைத்து அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.