தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மே 22-இல் எதிர்க்கட்சிகள் கூட்டம்: சோனியா அழைப்பு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மே-22 ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :19 மே 2020, 2:39 pm

DIN


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மே-22 ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

இதுபற்றி தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மே 22-ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்துக்கு சோனியா காந்தி தலைமை வகிக்கிறார். பிற்பகல் 3 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக இந்தக் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், ஜார்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன், திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து சீதாராம் யெச்சூரி, ராஷ்ட்ரிய ஜனதா தளத்திலிருந்து தேஜஸ்வி யாதவ் உள்பட 20 கட்சிகளிலிருந்து தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதை மம்தா பானர்ஜி திங்கள்கிழமை உறுதி செய்தார்.

இந்தக் கூட்டத்தில் கரோனா நெருக்கடிக்கு மத்தியில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்புவதில் சந்திக்கும் இன்னல்கள் பற்றி விவாதிக்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.