அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.295.55 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிதியில் ரூ.295.55 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

News image
Updated On :20 மே 2020, 9:44 am

DIN

புது தில்லி: தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிதியில் ரூ.295.55 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புது தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 

மத்திய அரசு அறிவித்த சிறப்பு பொருளாதார திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக 15வது நிதிக் குழுவின் கோரிக்கைகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிதியில் ரூ.295.55 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 15வது நிதிக்குழுவின் கோரிக்கையை ஏற்று தமிழக ஊரக உள்ளாட்சித் துறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 

நாட்டில் அதிகபட்சமாக  உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு ரூ.816 கோடியும், பிகாருக்கு ரூ.502 கோடியும், மத்தியப்பிரதேசத்தில் ரூ.330 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

முத்ரா திட்டத்தின் கீழ் சிறு குறு தொழில் முனைவோருக்கு  கடன் வழங்க ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி வழங்கவும் மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.