அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஒட்டுமொத்த நாடும் உடன் நிற்கிறது: புயல் பாதித்த மாநிலங்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல்

புயலால் உயிரிழப்புகளையும் கடும் சேதங்களையும் சந்தித்திருக்கும் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு உறுதுணையாக ஒட்டுமொத்த நாடும் துணை நிற்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

News image
Updated On :21 மே 2020, 12:43 pm

PTI


புது தில்லி: புயலால் உயிரிழப்புகளையும் கடும் சேதங்களையும் சந்தித்திருக்கும் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு உறுதுணையாக ஒட்டுமொத்த நாடும் துணை நிற்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மேலும், புயலால் சேதமடைந்த அனைத்தையும் மத்திய அரசு முழு முயற்சி மேற்கொண்டு புனரமைத்துக் கொடுக்கும் என்றும், புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோசமான நேரத்தில் புயலை மிக தைரியத்தோடு எதிர்கொண்ட ஒடிசா மாநில மக்களின் பேரில் நினைவு செல்கிறது.

இவ்விரண்டு மாநிலங்களிலும் இயல்பு நிலையை திரும்பக் கொண்டு வருவதற்கான முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மூத்த அதிகாரிகள் மாநிலத்தின் நிலைமையை கண்காணித்து வருகிறார்கள் என்றும் மோடி கூறியுள்ளார்.

முன்னதாக, உம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் இதுவரை 72 பேர் பலியாகியிருப்பதாகவும், பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா 2.5 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார்.

மேலும் அவர் பேசுகையில், இதுபோன்றதொரு பேரிடரை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்க மாநிலத்துக்கு வந்து, தற்போதிருக்கும் நிலைமையை, சேதங்களை நேரில் பார்வையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பயிர்கள், குடிசைகள், பாலங்கள் என ஒன்றுவிடாமல் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது என்றும் மம்தா கூறியிருந்தார்.

ஒடிசாவில் புயல் பாதிப்பினால் சுமார் 44.8 லட்சர் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. 

வங்கக் கடலில் உருவான ‘உம்பன் புயல்’ புதன்கிழமை பிற்பகலில் கரையைக் கடந்தது. மணிக்கு 190 கி.மீ. வேகம் வரை பலத்த காற்று வீசியதுடன், கன மழை பெய்ததால் மேற்கு வங்கம், ஒடிஸா மாநிலங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.