ஏற்கனவே தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் உணவக ஊழியர் கரோனா பாதித்து பலியான நிலையில், இன்று மருத்துவமனை ஊழியர் ஒருவர் கரோனாவுக்கு பலியாகியுள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவின் துப்புரவுப் பணி கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் ஹிராலால்.
இது பற்றி மருத்துவமனை ஊழியர்கள் சிலர் கூறுகையில், அவர் பணி நேரத்தின் போது மிகவும் எச்சரிக்கையாகவே செயல்படுவார். அரசு அறிவுறுத்திய அனைத்து சுகாதாரப் பணிகளையும் அவர் மேற்கொண்டார். ஆனாலும் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது. மருத்துவமனையில் பணியாற்றும் போது எப்போதும் அவரைப் பற்றி அவர் கவலைப்பட்டதே இல்லை. நோயாளிகளின் நலனையே கவனித்து வந்தார், செவிலியர்கள் முதல் மருத்துவர்கள் வரை அனைவர் மீதும் அவர் அன்பு செலுத்தினார் என்று தெரிவித்தனர்.
அவரது உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. நடைமுறைகள் முடிந்ததும் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
ஏற்கனவே, எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்களுக்கான உணவகத்தில் பணியாற்றி வந்த ஊழியர் கரோனா பாதித்து மரணம் அடைந்த நிலையில், தற்போது ஊழியர் ஒருவரும் மரணம் அடைந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரானுடன் அமைதி பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டா்கள்! - அதிபர் டிரம்ப் அறிவிப்பு

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


