ஸ்ரீகாகுளம்: புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 10 பேர் காயமடைந்தார்கள்.
இந்த விபத்து தொடர்பாக ஸ்ரீகாகுளம் மாவட்டம் மண்டாசா பகுதி காவல் நிலைய துணை ஆய்வாளர் பிரசாத் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
புலம் பெயர் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் ஓட்டுநர் மற்றும் கிளீனர் தவிர 41 பேர் பயணம் செய்தனர். இந்தப் பேருந்தானது செவ்வாயன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள மண்டாசா பகுதிக்கு வந்த போது அதிக வேகத்தின் காரணமாக கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் காயம் அடைந்தனர். வேறு யாருக்கும் படுகாயங்கள் ஏற்படவில்லை. அவர்கள் உடனடியாக அருகிலுள்ள பலாசா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். விபத்து ஏற்படுத்திய பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் தப்பித்து ஓடிவிட்டனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாம் தமிழா் கட்சிக் கொடி அவமதிப்பு: கடலூா் எஸ்.பி.யிடம் புகாா்

ஈரோடு ரயில் நிலையத்தில் 80 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்

உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு மீனவ சங்கம் நிதியுதவி

பழனியில் குழந்தைகளின் ஓவியக் கண்காட்சி
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


