ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரோனா அச்சத்தால் குழந்தையின் உடலை வாங்க மறுத்த குடும்பம்; இறுதிச் சடங்கை செய்த அதிகாரிகள்

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டம் கரோனா தடுப்பு நடவடிக்கையால் புகழ்பெற்ற நிலையில், தற்போது கரோனா அச்சத்தால் உறவினர்கள் குழந்தையின் உடலை வாங்க மறுத்த நிலையில், இறுதிச் சடங்கை

News image
Updated On :30 மே 2020, 11:13 am

DIN

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டம் கரோனா தடுப்பு நடவடிக்கையால் புகழ்பெற்ற நிலையில், தற்போது கரோனா அச்சத்தால் உறவினர்கள் குழந்தையின் உடலை வாங்க மறுத்த நிலையில், இறுதிச் சடங்கை அதிகாரிகளே மேற்கொண்டதன் மூலம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டம் சவன்டியா கிராமத்தைச் சேர்ந்த குழந்தையின் பெற்றோர் சில நாள்களுக்கு முன்பு மும்பையில் இருந்து திரும்பிய நிலையில் குழந்தை உட்பட மூவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனையில், குழந்தையின் தந்தைக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. தாய்க்கும், குழந்தைக்கும் கரோனா இல்லை என்று தெரிய வந்ததை அடுத்து தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இது குறித்து மண்டல் பகுதியின் சுகாதாரத் துறை மருத்துவர் பிரகாஷ் கூறுகையில்,  தனிமைப்படுத்தும் மையத்தில், நீர்ச்சத்துக் குறைவால் குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டு புதன்கிழமை இரவு குழந்தை உயிரிழந்தது. நடைமுறைகள் முடிந்து குழந்தையின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க மருத்துவர்கள் தயாராக இருந்தனர். வியாழக்கிழமை மதியம் வரை காத்திருந்தும், குழந்தையின் உடலை வாங்க யாரும் வரவில்லை.

இதையடுத்து, மண்டல் பகுதியின் துணை மண்டல நீதிபதி மணிபால் சிங் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள், குழந்தையின் குடும்பத்தாரை வரவழைத்து, குழந்தைக்கு கரோனா இல்லை, எனவே உடலை வாங்கிச் சென்று இறுதிச் சடங்குகளை மேற்கொள்ளுமாறு எடுத்துக் கூறினர். ஆனால் அது பலனளிக்கவில்லை.

இதையடுத்து, நீதிபதி மஹிபால் சிங், குழந்தையின் உடலை இடுகாட்டுக்கு எடுத்துச் சென்று, தானே குழி தோண்டி, குழந்தையின் இறுதிச் சடங்கை மேற்கொண்டார்.

தந்தைக்கு கரோனா இருப்பதால் குழந்தைக்கும் கரோனா இருக்கும் என்றும், அதற்கு இறுதிச் சடங்கு செய்தால் தங்களுக்கும் நோய் பரவிவிடும் என்று உறவினர்கள் அஞ்சினர். எவ்வளவோ எடுத்துச் சொல்லியில் இறுதிச் சடங்கு செய்ய முன்வரவில்லை. எனவே, நாங்களே குழந்தையின் உடலுக்கு இறுதிச் சடங்குகளை மேற்கொண்டோம் என்கிறார் மஹிபால் சிங்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.