ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கொலை வழக்கு: கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ விசாரணை

கர்நாடக பாஜக தலைவர் யோகேஷ் கௌடா கொலை வழக்கு தொடர்பாக அம்மாநில முன்னாள் அமைச்சர் வினய் குல்கர்னியிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. 

News image
கோப்புப்படம்
Updated On :5 நவம்பர் 2020, 11:20 am

DIN

கர்நாடக பாஜக தலைவர் யோகேஷ் கௌடா கொலை வழக்கு தொடர்பாக அம்மாநில முன்னாள் அமைச்சர் வினய் குல்கர்னியிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. 

கர்நாடக பாஜக தலைவரும், தார்வாட் மாவட்ட ஊராட்சி உறுப்பினருமான யோகேஷ் கௌடா கடந்த 2016ஆம் ஆண்டு, ஜூன் 15ஆம் தேதி உடற்பயிற்சி கூடத்தில் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த அம்மாநில காவல்துறையினர் 7 பேரை கைது செய்தனர். 

பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கில் தொடர்புடைய 6 பேரை கடந்த மார்ச் மாதம் சிபிஐ கைது செய்தது. இந்த நிலையில் யோகேஷ் கௌடா கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வினய் குல்கர்னியை அழைத்து சிபிஐ இன்று விசாரணை நடத்தி வருகிறது. 

வினய் குல்கர்னி காங்கிரஸ் ஆட்சியின்போது சுரங்கத் தொழில் துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.