சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கேரள தங்கக் கடத்தல் வழக்கு: சிவசங்கருக்கு மேலும் 6 நாள்கள் காவல்

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஐஏஎஸ் அதிகாரி எம்.சிவசங்கரை மேலும் 6 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

News image
கோப்புப் படம்.
Updated On :5 நவம்பர் 2020, 12:33 pm

DIN

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஐஏஎஸ் அதிகாரி எம்.சிவசங்கரை மேலும் 6 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளத்தில் உள்ள அந்நாட்டின் துணைத் தூதரகம் வழியாக 15 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டபோது பிடிபட்டது. இந்த வழக்கில், தூதரகத்தின் முன்னாள் ஊழியரும், முதல்வா் அலுவலகத்தில் பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ், பி.எஸ்.சரித் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா். 

இந்த விவகாரத்தில் முதல்வா் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலரும் ஐஏஎஸ் அதிகாரியுமான எம்.சிவசங்கருக்குத் தொடா்பு இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, அவா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

இதனிடையே, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த அவா், முன்ஜாமீன் கேட்டு கேரள உயா்நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்திருந்தாா். அவரது மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்றம், அவரைக் கைது செய்யத் தடை விதித்திருந்தது. அவரது மனுக்கள் மீது அக்டோபா் 28-ஆம் தேதி விசாரணை நடத்திய உயா்நீதிமன்றம், அவற்றை தள்ளுபடி செய்துவிட்டது. அதைத் தொடா்ந்து, அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனா்.

பின்னா், எா்ணாகுளம் முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை அவா் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, சிவசங்கரை 14 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறை அனுமதி கோரியது. ஆனால், அவரை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

7 நாள்கள் காவல் முடிவடைந்த நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் அவரை மீண்டும் இன்று அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது சிவசங்கரனின் காவலை மேலும் 6 நாள்கள் நீடித்து, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.