அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உ.பி. விவசாயிகளுக்கான மின்கட்டணத்தில் முறைகேடு: பிரியங்கா குற்றாச்சாட்டு

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளுக்கான மின் கட்டணத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

News image
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி (கோப்புப்படம்)
Updated On :6 நவம்பர் 2020, 6:17 am

DIN

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளுக்கான மின் கட்டணத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

விவசாயிகளுக்கான மின் கட்டண முறைகேடு குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''முந்தைய ஆண்டுகளில் மின் கட்டணம் அதிகரிக்காத நிலையில், கடந்த 8 ஆண்டுகளில் மின் கட்டணம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் வீட்டு நுகர்வோர் மின் கட்டணம் 500 சதவிகிதமும், நகர்புற வீட்டு மின்சாரம் 84 சதவிகிதமும், விவசாயிகளுக்கான கட்டணம் 126 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. 

உத்தரப்பிரதேசத்தில் மட்டும் மின் அளவீட்டு மீட்டர்கள் வழக்கத்தை விட அதிக அளவு ஓடுவதாகவும், பூட்டிய வீடுகளில் கூட 7 முதல் 8 ஆயிரம் வரை மின் கட்டண ரசீது வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், பல மாவட்டங்களில் உள்ள வீடுகளில் மின் மீட்டர்கள் இல்லமலேயே மின் கட்டண ரசீதுகள் வருவதாக விமர்சித்துள்ளார்.

ஏற்கனவே விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். விவசாயிகள் தங்களது விளைப் பொருள்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். வெள்ளம், கனமழை போன்ற இயற்கை சீற்றத்தில் விவசாயிகள் அரசாங்கத்தின் உதவியின்றி கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஆனால், விவசாயப் பொருள்களுக்கான பெருநிறுவனங்கள் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இழப்பை பெற்றுக்கொள்கின்றன. 

இந்த நிலையில் விவசாயிகளுக்கான மின் கட்டணம் அதிகரித்துள்ளது கண்டிக்கத்தக்கது. மின் கட்டண மாற்றங்களை வீட்டு உபயோக நுகர்வோர்களும் அதிக நாட்களுக்கு பொறுத்துக்கொள்ளமாட்டார்கள். 

விவசாயிகளுக்கான மின் கட்டணத்தைப் பாதியாக குறைக்க வேண்டும். அதேபோன்று கைவினைக் கலைஞர்கள் மற்றும் குடிசைத் தொழிலாளர்களுக்கான மின் கட்டணத்திலும் சலுகை வழங்க வேண்டும்'' என்று பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.