“பிகார் மக்கள் நிதிஷ் குமாருக்கு ஓய்வளிப்பார்கள்”: சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத்
பிகார் மக்கள் பேரவைத் தேர்தலின் மூலம் நிதிஷ் குமாருக்கு ஓய்வளிப்பார்கள் என சிவசேனை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.
பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
பிகாரில் ஜேடியு தலைவரும், முதல்வருமான நிதீஷ் குமாா், 15 ஆண்டுகளாக முதல்வா் பதவியில் இருக்கிறாா். இந்நிலையில் நடைபெற்று வரும் பேரவைத் தேர்தலில் நிதிஷ்குமாருக்கு பிகார் மக்கள் ஓய்வளிப்பார்கள் என சிவசேனை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நிதிஷ்குமார் மிகப்பெரிய தலைவர். அவர் தனது பதவிக்காலத்தை முழுமையாக பயன்படுத்தியுள்ளார்.” எனத் தெரிவித்தார்.
மேலும்,“நிதிஷ்குமார் சொல்வது போல் இது அவருடைய கடைசித் தேர்தலாக இருந்தால் அவர் மரியாதையுடன் விடைபெற வேண்டும். பிகார் மக்கள் இந்த தருணத்திற்காகக் காத்திருந்தனர். இந்தத் தேர்தல் மூலம் மக்கள் அவருக்கு ஓய்வளிப்பார்கள்.” என சஞ்சய் ரெளத் தெரிவித்தார்.