அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உத்தரப்பிரதேசத்தில் பட்டாசுகள் வெடிக்கக் கட்டுப்பாடுகள் விதிப்பு

உத்தரப்பிரதேசத்தில் மிதமான அளவில் காற்று மாசடைந்த நகரங்களில் பசுமைப் பட்டாசுகளை மட்டும் வெடிக்க மாநில அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

News image
உ.பி.யில் காற்று மாசடைந்த நகரங்களில் பட்டாசுகள் வெடிக்கக் கட்டுப்பாடுகள் விதிப்பு
Updated On :10 நவம்பர் 2020, 10:49 am

DIN

உத்தரப்பிரதேசத்தில் மிதமான அளவில் காற்று மாசடைந்த நகரங்களில் பசுமைப் பட்டாசுகளை மட்டும் வெடிக்க மாநில அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

கரோனா தொற்று பாதிப்பு மத்தியில் தீபாவளி பண்டிகை வருவதால் பட்டாசுகள் வெடிப்பது குறித்து பல்வேறு மாநில அரசுகளும் கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாடு குறித்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி காற்று மாசடைந்த நகரங்களில் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் முசாபர்நகர், ஆக்ரா, வாரணாசி, மீரட், ஹப்பூர், காஜியாபாத், கான்பூர், லக்னோ, மொராதாபாத், நொய்டா, கிரேட்டர் நொய்டா, பாக்பத், புலந்த்ஷாஹர் உள்ளிட்ட நகரங்களில் நவம்பர் 9 நள்ளிரவு முதல் நவம்பர் 30 நள்ளிரவு வரை அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மேற்குவங்கம், ராஜஸ்தான், ஒடிசா, சிக்கிம், சண்டிகர் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.