மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லி காற்று மாசு: தீபாவளிக்கு மிக மோசமடைய வாய்ப்பு

தில்லியில் தீபாவளி நாளன்று காற்று மாசு மிக மோசமான நிலையை அடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

News image
தில்லி காற்று மாசு: தீபாவளிக்கு மிகவும் மோசமடைய வாய்ப்பு (கோப்புப்படம்)
Updated On :13 நவம்பர் 2020, 11:18 am

DIN

தில்லியில் தீபாவளி நாளன்று காற்று மாசு மிக மோசமான நிலையை அடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தில்லியில் ஏற்கனவே காற்று மாசு மோசமான நிலையில் இருப்பதாகவும், தீபாவளி நாளன்று காற்று மாசு தீவிரமடைந்து மிக மோசமான நிலையை அடையும் என்றும் எச்சரித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சுற்றுச்சூழல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் வி.கே.சோனி பேசியதாவது, ''தில்லியில் ஏற்கனவே காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், தீபாவளி நாளன்று மேலும் புகை அதிகரித்தால் காற்றின் தரம் மோசமான நிலையை அடையும். நவம்பர் 15-ஆம் தேதி மழை பெய்ய வாய்ப்புள்ளதால் காற்றின் தரக் குறியீட்டில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது'' என்று கூறினார்.

வார இறுதி மற்றும் பண்டிகை நாள்களையொட்டி வாகனப்போக்குவரத்து அதிகரித்துள்ளதால், தில்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தில்லியின் காற்று தரக்குறியீடு மற்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 

கரோனா பரவல் மற்றும் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் தில்லியில் நவம்பர் 9-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை பட்டாசு வெடிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.