மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரோனா: தில்லியில் மூன்றாவது அலை வீசுகிறதா?

தில்லியில் தற்போது கரோனா பரவல் தீவிரமடைந்திருக்கும் நிலையில், தினசரி கரோனா பலி எண்ணிக்கை வியாழக்கிழமையன்று 100 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது.

News image
கரோனா: தில்லியில் மூன்றாவது அலை வீசுகிறதா?
Updated On :13 நவம்பர் 2020, 5:53 am

DIN


புது தில்லி: தில்லியில் தற்போது கரோனா பரவல் தீவிரமடைந்திருக்கும் நிலையில், தினசரி கரோனா பலி எண்ணிக்கை வியாழக்கிழமையன்று 100 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை காலையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் தில்லியில் மட்டும் புதிதாக 7,332 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கரோனா பாதித்தவர்களில் 104 பேர் பலியாகியுள்ளனர்.

தில்லியில் கரோனா மிகத் தீவிரமாக இருந்த நிலையில்கூட இதுவரை 100-ஐ எட்டியிராத நிலையில், தற்போது தில்லியில் கரோனா பலி நூறை கடந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்ப ஜூன் 16-ம் தேதி கரோனா பாதித்த 93 பேர் பலியாகியிருந்ததே அதிகபட்ச ஒருநாள் பலி எண்ணிக்கையாக இருந்தது.

புதன்கிழமை தில்லியில் புதிதாக 8,593 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், வியாழக்கிழமை 7,053 ஆக இருக்கிறது. 

தில்லியில் கடந்த சில நாள்களாகவே கரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கை 70 - 80 ஆக இருந்து வருவது, தில்லியில் கரோனா தாக்கத்தின் மூன்றாவது அலை வீசுகிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

தில்லியில் நேற்று ஒரே நாளில் 6,462 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பியதை அடுத்து, இதுவரை அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,16,580 ஆக உயர்ந்துளள்து.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.