மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லி: தீபாவளிக்குப் பிறகு உச்சமடைந்த காற்று மாசு

தில்லியில் தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான இன்று அதிகாலை முதலே காற்று மாசு மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. சாலைகளில் நிலவும் அடர் புகையால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.

News image
தில்லி: தீபாவளிக்குப் பிறகு உச்சமடைந்த காற்று மாசு (கோப்புப்படம்)
Updated On :15 நவம்பர் 2020, 5:28 am

DIN

தில்லியில் தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான இன்று அதிகாலை முதலே காற்று மாசு மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. சாலைகளில் நிலவும் அடர் புகையால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.

தீபாவளிப் பண்டிகையையொட்டி பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் தில்லி அரசு தடை விதித்திருந்தாலும், ஒருசில இடங்களில் கட்டுப்பாட்டை மீறி மக்கள் பட்டாசுகளை வெடித்தனர். தலைநகரில் பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகளை எரித்ததாலும், தில்லியில் பட்டாசு வெடித்ததாலும் தலைநகரில் நேற்று இரவு 11 மணியிலிருந்து காற்று மாசு மோசமான நிலையை எட்டியது. 

தில்லியின் ஆனந்த் விஹார் பகுதியில் காற்றின் தரக்குறியீடு 481-ஆக பதிவாகியுள்ளது. விமான நிலையத்தையொட்டியுள்ள பகுதிகளில் 444, லோதி சாலைப்பகுதிகளில் 414-ஆக காற்றின் தரக்குறியீடு பதிவாகியுள்ளது. தில்லியின் இந்த மூன்று பகுதிகள் காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

மேலும் இன்று விவசாயக் கழிவுகளின் மாசு அதிகமானால் இன்று மாலை காற்றின் தரம் மிக மிக மோசமான நிலையை அடைய வாய்ப்புள்ளதாக தில்லி மாசுக் கட்டுப்பாட்டு குழு கணித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.