வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இமாசலில் கால்வாயில் வாகனம் கவிழ்ந்ததில் 7 பேர் பலி

இமாசலப் பிரதேசம் மண்டி மாவட்டத்தில் வாகனம் ஒன்று சாலையோரம் இருந்த கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த 7 பேர் பலியாகினர்.

News image
இமாசலில் கால்வாயில் வாகனம் கவிழ்ந்ததில் 7 பேர் பலி
Updated On :16 நவம்பர் 2020, 9:12 am

PTI


மண்டி: இமாசலப் பிரதேசம் மண்டி மாவட்டத்தில் வாகனம் ஒன்று சாலையோரம் இருந்த கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த 7 பேர் பலியாகினர்.

விபத்து நடந்த இடத்திலேயே 6 பேர் பலியானதாகவும், ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியானதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில், வாகன ஓட்டுநர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மண்டி சாலை விபத்து: பிரதமர் வேதனை
பிரதமர் நரேந்திர மோடி, இமாசலப்பிரதேசம் மண்டியில் ஏற்பட்ட சாலை விபத்தில் பலர் உயிரிழந்திருப்பது குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.

அவர் பகிர்ந்துள்ள சுட்டுரைப் பதிவில், “இமாசலப்பிரதேசம் மண்டியில் ஏற்பட்ட சாலை விபத்து குறித்து அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அங்கு, அரசு, மீட்புப் பணிகளையும், நிவாரணப் பணிகளையும் செய்து வருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமுற்றவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.