மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒடிசாவில் 10 கி.மீ. நடந்து சென்று தந்தையின் மீது புகாரளித்த 11 வயது சிறுமி

மதிய உணவிற்காக அரசு வழங்கிய பணத்தை பறித்துக் கொண்ட தனது தந்தையின் மீது 10 கி.மீ. நடந்தே சென்று மாவட்ட ஆட்சியரிடம் 11 வயது சிறுமி புகாரளித்த சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது.

News image
ஆட்சியரிடம் புகாரளித்த சங்கிதா சேத்தி
Updated On :17 நவம்பர் 2020, 10:41 am

DIN

மதிய உணவிற்காக அரசு வழங்கிய பணத்தை பறித்துக் கொண்ட தனது தந்தையின் மீது 10 கி.மீ. நடந்தே சென்று மாவட்ட ஆட்சியரிடம் 11 வயது சிறுமி புகாரளித்த சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது.

ஒடிசாவில் கரோனா தொற்றுநோய் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கான மதிய உணவிற்கான அரிசி மற்றும் பணத்தை மாநில அரசு மாணவர்களின் பெற்றோர்களுக்கு வங்கிக் கணக்கில் வழங்கி வருகிறது.

இந்நிலையில் கேந்திரபாரா மாவட்டத்தின் டுகுகா கிராமத்தைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி சங்கிதா சேத்தி தனது தந்தையின் மீது புகாரளிக்க 10 கி.மீ. நடந்து சென்ற சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மதிய உணவிற்காக அரசின் சார்பில் வழங்கப்பட்ட அரிசி மற்றும் பணத்தை தனது தந்தை வழங்க மறுப்பதாக தெரிவித்த சேத்தி அவற்றை மீட்டுத் தர வேண்டும் எனக்கோரி 10 கி.மீ நடந்து சென்று மாவட்ட ஆட்சியர் சமர்த் வர்மாவிடம் எழுத்துப்பூர்வமாக புகாரளித்துள்ளார்.

சேத்தியின் தாயார் 2 வருடங்களுக்கு முன் காலமானதைத் தொடர்ந்து மறுமணம் செய்து கொண்ட அவரது தந்தை சேத்தியை கவனித்துக் கொள்ள மறுப்பதால் அவர் தற்போது தனது உறவினரின் வீட்டில் வசித்து வருகிறார்..

கேந்திரபாரா ஆட்சியர் சமர்த் வர்மா கூறுகையில், "இப்போதிலிருந்து பணத்தை சேத்தியின் வங்கிக்கணக்கில் செலுத்துமாறு மாவட்ட கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டேன். மேலும், பணத்தையும் அரிசியையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

உரிய நடவடிக்கைக்காக தனது தந்தையின் மீதே புகாரளித்த சிறுமி சேத்தியின் துணிச்சலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.