அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தில்லி கரோனா பரவல் எதிரொலி: உ.பி. எல்லையில் பரிசோதனை அதிகரிப்பு

தில்லியில் கரோனா தொற்று அதிகரிப்பதன் எதிரொலியாக உத்தரப்பிரதேச எல்லைப் பகுதியான நொய்டாவில் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image
தில்லி கரோனா பரவல் எதிரொலி: உ.பி.யில் பரிசோதனை அதிகரிப்பு (கோப்புப்படம்)
Updated On :18 நவம்பர் 2020, 9:59 am

DIN

தில்லியில் கரோனா தொற்று அதிகரிப்பதன் எதிரொலியாக உத்தரப்பிரதேச எல்லைப் பகுதியான நொய்டாவில் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தில்லி - நொய்டா எல்லையில் கரோனா பரிரோதனை செய்த பிறகே மக்கள் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தில்லியில் கரோனா பரவல் மூன்றாவது முறையாக மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் நாள்தோறும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இதன் எதிரொலியாக தில்லியின் எல்லைப் பகுதியான நொய்டாவில் கரோனா பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய கெளதம புத்தா நகர் ஆட்சியர் சுஹாஸ், ''கரோனா தொற்று அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லைப் பகுதிகளில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மாநில எல்லைப் பகுதிகள் திறக்கப்பட்டுள்ளன. எந்தவித கட்டுப்பாடுகளும் தற்போது இல்லை. அதனால் எல்லைப் பகுதிகளைக் கடந்து வரும் மக்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பரிசோதனை முகாம்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும்'' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.