வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம்: கேஜரிவால் அழைப்பு

​தில்லியில் நாளை (வியாழக்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :18 நவம்பர் 2020, 11:35 am

DIN


தில்லியில் நாளை (வியாழக்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.

தில்லியில் கரோனா பாதிப்பு 3-ம் அலை வீசிக் கொண்டிருக்கிறது. இதனால், கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து காணப்படுகிறது. எனினும், 3-ம் அலையின் உச்சத்தைக் கரோனா கடந்துவிட்டதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் இந்த வார தொடக்கத்தில் தெரிவித்தார். பாதிப்பு அதிகரிப்புக்கு மத்தியிலும் மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்தும் திட்டம் இல்லை என்பதை அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. மத்திய அரசு தரப்பிலும் தில்லிக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தில்லியில் நிலவும் கரோனா சூழல் குறித்து ஆலோசனை நடத்த முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நாளை காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.