குடியரசுத் தலைவர் எழுதிய புத்தங்களை வெளியிட்டார் அமைச்சர் ராஜ்நாத் சிங்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எழுதிய புத்தகங்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.


குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எழுதிய புத்தகங்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை வெளியிட்டார்.
குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், 'தி ரிபப்ளிகன் எதிக்' (The Republican Ethic), 'லோக்தந்த்ரா கே ஸ்வார்'(Loktantra Ke Swar) ஆகிய இரண்டு புத்தங்களை எழுதியுள்ளார். இந்தப் புத்தகங்களை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தில்லியில் இன்று வெளியிட்டார். அதேபோன்று தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் இவ்விழாவில் கலந்துகொண்டார்.

புத்தகங்களை வெளியிட்ட அமைச்சர் ராஜ்நாத் சிங் 'இந்த புத்தகங்கள் இந்தியாவின் தற்போதைய நிலையை எடுத்துக்கூறுகின்றன' எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...