ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

'கரோனாவுக்கு பலியான முன்கள வீரர்களின் வாரிசுகளுக்கு 5 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு'

முன்கள வீரர்களின் வாரிசுகளுக்காக, 5 எம்பிபிஎஸ் மருத்துவ சேர்க்கை இடங்களை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

News image
'கரோனாவுக்கு பலியான முன்கள வீரர்களின் வாரிசுகளுக்கு 5 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு'
Updated On :19 நவம்பர் 2020, 9:36 am

DIN


புது தில்லி: கரோனாவுக்கு எதிரான போரில் தொற்று பாதித்து உயிரிழந்த முன்கள வீரர்களின் வாரிசுகளுக்காக, 5 எம்பிபிஎஸ் மருத்துவ சேர்க்கை இடங்களை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறுகையில், கரோனாவுக்கு எதிரான போரில் நாட்டுக்காக முன்களத்தில் நின்று போராடி உயிரை நீத்த வீரர்களை கௌரவிக்கும் வகையில், அவர்களது வாரிசுகளுக்கு எம்பிபிஎஸ் மருத்துவ இடங்களை வழங்கும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதற்காக, நாடு முழுவதும் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில், மத்திய அரசின் கீழ் இருக்கும் எம்பிபிஎஸ் மருத்துவ சேர்க்கை இடங்களில், புதிதாக கரோனா முன்கள வீரர்களின் வாரிசுகளுக்கு என புதிய உள் ஒதுக்கீட்டு முறையை உருவாக்க வழிகாட்டு நெறிமுறை அனுப்பப்பட்டுள்ளது.

சுயநலமின்றி, நாட்டுக்காக பணியாற்றிய மருத்துவ முன்களப் பணியாளர்களின் உயிர்தியாகத்தை கௌரவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டிருப்பதாக ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.