அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நொய்டா: நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை

நொய்டாவில் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கையை மாவட்ட அரசு குறைத்துள்ளது. அதன்படி பொதுநிகழ்ச்சிகளில் 100 நபர்களுக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
நெய்டா: நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை (கோப்புப்படம்)
Updated On :21 நவம்பர் 2020, 1:13 pm

DIN

கரோனா பரவல் காரணமாக உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கையை மாவட்ட அரசு குறைத்துள்ளது. அதன்படி பொதுநிகழ்ச்சிகளில் 100 நபர்களுக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தலைநகரான தில்லி, ஹரியாணா ஆகிய அண்டை மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பொதுநிகழ்ச்சிகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை குறித்து பேசிய நொய்டா மாவட்ட ஆட்சியர் சுஹாஸ், ''வெளியிடங்கள் அல்லது வீடுகளில் நடக்கும் திருமணம் உள்ளிட்ட எந்தவொரு நிகழ்ச்சியிலும் நூறு நபர்களுக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. 

கரோனாவைக் கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அரசின் உத்தரவை மீறி நடப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறினார்.

தில்லி - உத்தரப்பிரதேச எல்லைப் பகுதியான நொய்டாவில் ஏற்கனவே கரோனா பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டு கரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.