மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

கரோனா 2-ம் அலை சுனாமிபோல் இருக்கலாம்: உத்தவ் எச்சரிக்கை

​கரோனா 2-ம் அலை சுனாமிபோல் இருக்கலாம் என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :22 நவம்பர் 2020, 5:18 pm


கரோனா 2-ம் அலை சுனாமிபோல் இருக்கலாம் என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை உரையாற்றிய உத்தவ் தெரிவித்ததாவது:

"நம்மிடம் தடுப்பூசி இல்லை. கரோனாவுக்கான சிகிச்சையும் இல்லை. அதனால், அதுவரை தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். முகக் கவசம் அணிவதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, பொது இடங்களில் அதிகம் கூடுவதைத் தவிர்ப்பது உள்ளிட்டவையே சிறந்த தடுப்பு நடவடிக்கையாக இருக்க முடியும்.

மீண்டும் ஒரு பொது முடக்கம் வேண்டாம். என்னுடைய 5 ஆண்டு கால ஆட்சியை பொது முடக்கம் மேல் பொது முடக்கத்துடன் நிறைவு செய்ய விரும்பவில்லை. அனைத்துப் பண்டிகைகளும் கட்டுப்பாட்டுடன் கொண்டாடினாலும், ஆபத்தின் வீரியம் இன்னும் குறையவில்லை" என்றார் உத்தவ்.

முன்னதாக, புணேவில் பேசிய துணை முதல்வர் அஜித் பவார், அடுத்த 8 முதல் 10 நாள்கள் நிலைமையைக் கண்காணித்து ஆய்வு செய்து பொது முடக்கம் குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.