ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஐஎம்ஏ முறைகேடு வழக்கு: கர்நாடக முன்னாள் அமைச்சர் கைது

ஐ.எம்.ஏ. முறைகேடு வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்க் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :22 நவம்பர் 2020, 3:54 pm

DIN

ஐ.எம்.ஏ. முறைகேடு வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்க் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் பெங்களூருவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ரோஷன் பெய்க்கை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கைதான ரோஷன் பெய்க் கர்நாடக மாநில நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஎம்ஏ சீட்டு நிறுவனத்தை மன்சூர் கான் என்பவர் நடத்தி வந்தார். நிறுவனத்தில் சேமிக்கப்படும் தொகைக்கு, அதிக வட்டி வழங்கப்படும் என்று உறுதியளித்து, லட்சக்கணக்கான மக்களிடம் பணம் பெற்றுள்ளார். பணம் செலுத்தியவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் ஆவர். தனது நிறுவனத்தில் பணத்தைச் சேமிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தும்படி மதபோதகர்கள் சிலரிடமும் அவர் கூறியுள்ளார். 

இந்த நிலையில், கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ஆர்.ரோஷன் பெய்க், தன்னிடம் இருந்து ரூ.400 கோடி பெற்றதாகவும், அதைத் திருப்பித் தர அவர் மறுத்து வருவதாகவும் குற்றம்சாட்டிய மன்சூர் கான், மத்திய, மாநில அரசுகள் ஊழலில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டினார். ஆனால், மன்சூர் கானிடம் இருந்து தாம் பணம் எதுவும் பெறவில்லை என பெய்க் தெரிவித்தார். இதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். 

இதைத் தொடர்ந்து, மன்சூர் கான் துபைக்குத் தப்பிச் சென்றார். அங்கிருந்து இந்தியாவுக்குக் கடந்த ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி திரும்பிய வேளையில், அமலாக்கத் துறையினர் அவரைக் கைது செய்தனர். தற்போது அவர் ஜாமீனில் உள்ளார். இதனிடையே, இந்த வழக்கை விசாரிக்குமாறு, சிபிஐயிடம் கர்நாடக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.