மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

தெலங்கானாவில் குணமடைந்தோர் விகிதம் 95 சதவீதமாக உயர்வு

தெலங்கானாவில் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் விகிதம் 95.20 ஆக அதிகரித்துள்ளது. 

News image

தெலங்கானாவில் குணமடைந்தோர் விகிதம் 95 சதவீதமாக உயர்வு

Updated On :23 நவம்பர் 2020, 6:54 am

தெலங்கானாவில் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் விகிதம் 95.20 ஆக அதிகரித்துள்ளது. 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவிலும் கரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 602 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,64,128 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 11,227 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 8,942 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு புதிதாக 3 பேர் பலியானதால், மொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 1,433-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 1,015 பேர் குணமடைந்ததால், மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 2,51,468 ஆக அதிகரித்துள்ளது. குணமடைவோர் விகிதத்தை தேசிய அளவோடு ஒப்பிடும்போது 93.7 சதவிகிதமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.