சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ராஜ்கோட் கரோனா மருத்துவமனையில் தீ விபத்து: ராகுல் காந்தி கண்டனம்

சம்பவத்துக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News image
ராஜ்கோட் கரோனா மருத்துவமனையில் தீ விபத்து: ராகுல் காந்தி கண்டனம்
Updated On :27 நவம்பர் 2020, 9:06 am

PTI


ராஜ்கோட்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சிவானந்த் கரோனா மருத்துவமனையில் இன்று அதிகாலை நிகழ்ந்த தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் நேரிட்ட தீ விபத்து பெருந்துயரத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜ்கோட்டில் உள்ள சிவானந்த் கரோனா மருத்துவமனையில் கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை, இந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்தனர். 

இது குறித்து கண்டனம் தெரிவித்திருக்கும் ராகுல், ராஜ்கோட்டில் கரோனா மருத்துவமனையில் நேரிட்ட தீ விபத்து பெருந்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்றதொரு தீ விபத்து ஏற்கெனவே ஆமதாபாத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நேரிட்டது, இந்த தீ விபத்து குறித்து குஜராத் மாநில அரசு விசாரணை நடத்த வேண்டும், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கரோனாவுக்கு சிகிச்சை அளித்து வரும் அந்த மருத்துவமனையில் மொத்தம் 33 கரோனா நோயாளிகள் இருந்தனர். அவர்களில் 7 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அங்கு தீ பரவியதில் 5 பேர் பலியாகினர். 28 கரோனா நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.