ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஹாத்ரஸ் சம்பவம்: பாஜக எம்.எல்.ஏ. கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு

ஹாத்ரஸ் பாலியல் பலாத்கார சம்பவம் குறித்து பாஜக எம்.பி. சுரேந்திர சிங் கூறிய கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

News image
ஹாத்ரஸ் சம்பவம்: பாஜக எம்.எல்.ஏ. கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு
Updated On :5 அக்டோபர் 2020, 10:36 am

DIN

ஹாத்ரஸ் பாலியல் பலாத்கார சம்பவம் குறித்து பாஜக எம்.பி. சுரேந்திர சிங் கூறிய கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியில் 22 வயது பெண் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு, மிகக் கடுமையாக தாக்கப்பட்டு பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சுரேந்திர சிங், இளம் பெண்களின் பெற்றோர்கள், தங்களது மகள்களுக்கு நன்னடத்தையையும் கலாசாரத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் பலாத்கார சம்பவங்கள் தடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

அதாவது, பலாத்காரம் போன்ற சம்பவங்கள் அரசாலோ, கத்தியாலோ தடுத்துவிட முடியாது, நமது கலாசாரம் மற்றும் அதன் மதிப்பு மூலமாகவே தடுக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மக்களைப் பாதுகாக்கும் கடமை அரசுக்கு உள்ளது, ஆனால், பெண் குழந்தைகளின் பெற்றோர்தான் அவர்களுக்கு அடக்கமாக இருப்பதையும், நன்னடத்தையையும் கற்பிக்க வேண்டும், அப்போதுதான் கலாசாரம் மற்றும் அரசு மூலம் நமது நாடு மிக அழகான தேசமாக மாறும் என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனங்கள் பொதுமக்களால் முன் வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ஹாத்ரஸ் சம்பவத்தை உத்தரப்பிரதேச அரசு கையாண்ட விதம் குறித்து கடுமையான விமரிசனங்கள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில், பாஜக எம்எல்ஏவின் கருத்து கடும் விமரிசனங்களை பெற்று வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.