ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

கரோனா: மகாராஷ்டிர காவலர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்குகிறது

மகாராஷ்டிரத்தில் மேலும் 104 காவலர்களுக்கு  கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :6 அக்டோபர் 2020, 12:17 pm

மகாராஷ்டிரத்தில் மேலும் 104 காவலர்களுக்கு  கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்தியாவிலேயே கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. இதனால் அங்கு கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள் பலரும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், மகாராஷ்டிர காவல்துறையில் மேலும் 104 காவலர்களுக்கு  கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, மகாராஷ்டிர காவல்துறையில் இதுவரை 24,254 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் உயிரிழந்ததை அடுத்து மொத்த பலி 253 ஆக உயர்ந்துள்ளது.

அதேநேரத்தில் 21,423 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 2,578 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.