ஜம்மு-காஷ்மீர், சோபியன் மாவட்டத்தின் சாகுன் பகுதியில் பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று மாலை முதல் பாதுகாப்பு படையினருடனான மோதலில் மொத்தம் மூன்று தீவிரவாதிகள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர் என்று காஷ்மீர் மண்டல காவல்துறையினர் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்ற கடந்த செப்டம்பர் 27-ல் அவந்திபோரா மாவட்டத்தின் சம்பூரா பகுதியில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.