கேரளம்: நாட்டில் முதன்முறையாக விவசாயிகளுக்காக நல வாரியம்
நாட்டில் முதன்முறையாக கேரளத்தில் விவசாயிகளுக்காக நல நிதிய வாரியம் அமைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.


திருவனந்தபுரம்: நாட்டில் முதன்முறையாக கேரளத்தில் விவசாயிகளுக்காக நல நிதிய வாரியம் அமைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
புதன்கிழமையான நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் விவசாயிகளுக்காக 'கேரள கர்ஷகா ஷேமநிதி வாரியம்' அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டின் முதல்முறையாக விவசாயிகளுக்காக அமைக்கப்படும் நல நிதிய வாரியத்தின் தலைவராக டாக்டர் பி. ராஜேந்திரனை நியமிக்கவும் சட்டப்பேரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
விவசாயம் மட்டுமல்லாமல், தோட்டப்பயிர், மருத்துவ தாவர சாகுபடி
நாற்றங்கால் மேலாண்மை, மீன், அலங்கார மீன், தேனீக்கள், பட்டுப்புழுக்கள், கோழி, வாத்துகள், ஆடுகள், முயல்கள், கால்நடைகள் மற்றும் நிலத்தை பராமரித்தல், பயன்படுத்துதல் போன்றவற்றிற்காக இந்த நலவாரியம் அமைக்கப்பட உள்ளது.
இந்த வாரியத்தில் விவசாயிகள் இணைந்து பயன்பெறுவதற்கு ரூ.100 கொடுத்து உறுப்பினராகி பின்னர் மாத சந்தாவாக ரூ.100 கொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதம் தவறாமல் சந்தா கொடுக்க இயலாத விவசாயிகள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும் சந்தாவை செலுத்தி நலவாரியத்தின் பயன்களை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அரசு சார்பிலும் ஒவ்வொரு விவசாயியிக்கும் மாதம் ரூ.250 வரை ஒதுக்கப்படும் என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...