கால்நடை தீவன ஊழல் வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவா் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிகாரில் கடந்த 1992-93 இல் லாலு பிரசாத் யாதவ் முதல்வராக இருந்தபோது சாய்பாஸா (ஜாா்க்கண்ட்) கருவூலத்தில் இருந்து ரூ. 33.67 கோடி முறைகேடாக எடுக்கப்பட்டது தொடா்பான வழக்கில் ஜாமீன் கோரி, லாலு பிரசாத் யாதவ் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் லாலுவுக்கு ஜாமீன் வழங்கி ஜார்க்கண்ட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
உடல்நலக்குறைவு காரணமாக லாலு பிரசாத் யாதவ் தற்போது ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
தீவன முறைகேடு தொடா்பாக சாய்பாஸா கருவூல வழக்கு உள்பட 3 வழக்குகளில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
தீவன மோசடி வழக்கு தொடர்பாக 2017 டிசம்பர் முதல் சிறையில் இருக்கும் லாலு, 1991 முதல் 1996 வரை முதல்வராக பணியாற்றியபோது, தும்கா கருவூலத்தில் இருந்து ரூ.3.5 கோடியை மோசடி செய்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது. தும்கா கருவூல வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால் லாலு சிறையில்தான் இருப்பார் என்று கூறப்படுகிறது.
கடந்த 2000ஆம் ஆண்டில் பிகாரில் இருந்து ஜாா்க்கண்ட் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


