தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மகாராஷ்டிர மாநில அரசுப் பணியாளர் தேர்வுகள் ஒத்திவைப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற இருந்த அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். 

News image
மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே
Updated On :9 அக்டோபர் 2020, 2:13 pm

DIN

மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற இருந்த அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். 

மகாராஷ்டிரத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கரோனா அச்சம் காரணமாக தேர்வை ஒத்திவைக்கக்கோரி கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை தேர்வு ஒத்திவைப்பு அறிவிப்பை மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்தார். “பல்வேறு மாணவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் மகாராஷ்டிர மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. என உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

மேலும் தேர்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.