கோவா: ஆலையில் ஏற்பட்ட வாயு கசிவால் ஒருவர் பலி
கோவாவில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் ஒருவர் பலியான நிலையில், 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கோவாவில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் ஒருவர் பலியான நிலையில், 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவாவின் பனாஜி பகுதியில் செயல்பட்டு வரும் ஆலையில் வெள்ளிக்கிழமை காலை அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த வாயுக் கசிவை சுவாசித்ததில் ஒருவர் ஆலையிலேயே உயிரிழந்தார்.
மேலும் நான்கு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்மோனியா வாயு கசிவு தொடர்பாக கோவா தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் சார்பில் சம்பந்தப்பட்ட ஆலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...