ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஹாத்ரஸ் சம்பவம் நடந்த இடத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியில் 19 வயது தலித் பெண் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி பலியான வழக்கில், அப்பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இடத்தில் சிபிஐ அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

News image
ஹாத்ரஸ் சம்பவம் நடந்த இடத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு
Updated On :13 அக்டோபர் 2020, 9:22 am

PTI

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியில் 19 வயது தலித் பெண் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி பலியான வழக்கில், அப்பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இடத்தில் சிபிஐ அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

நான்கு இளைஞர்களால் அப்பெண் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில், சம்பவ இடத்தை அப்பெண்ணின் சகோதரர் அடையாளம் காட்ட, உள்ளூர் காவல்துறை உதவியுடன் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

ஹாத்ரஸ் தலித் இளம்பெண் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு பலியான வழக்கில் சிபிஐ முதல் தகவல் அறிக்கையை (எப்ஐஆா்) கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கிய நிலையில், இன்று சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் அண்மையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 19 வயது தலித் பெண், உடலில் பலத்த காயங்களுடன் அலிகா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தாா். பின்னா் தில்லியில் உள்ள சஃப்தா்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். உடற்கூறு ஆய்வு முடிவு குறித்த காவல்துறை அறிக்கையில், அந்த இளம்பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் தென்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்திருந்தனா். இது நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களை பாதுகாக்க குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருவதாக கூறப்பட்டதைத் தொடா்ந்து, பலியான பெண்ணின் குடும்பத்தினருக்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் பெரும் சா்ச்சையாக உருவெடுத்ததைத் தொடா்ந்து, இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றுமாறு உத்தர பிரதேச அரசு கேட்டுக்கொண்டது.

மேலும், ஹாத்ரஸ் சம்பவத்தை வைத்து, மாநிலத்தில் சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்க நடைபெறும் சதி குறித்தும் விசாரிக்க சிபிஐ-யிடம் உ.பி. அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதை ஏற்று, இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. அதனடிப்படையில், இந்த வழக்கு விசாரணையை சிபிஐ கையிலெடுத்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.