தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

நிரம்பி வரும் இடுக்கி அணை: எர்ணாகுளத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கேரளத்தின் மிகப்பெரிய அணையான இடுக்கி அணை நிரம்பி வருவதால் எர்ணாகுளத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
இடுக்கி அணை
Updated On :13 அக்டோபர் 2020, 6:16 am

DIN

கேரளத்தின் மிகப்பெரிய அணையான இடுக்கி அணை நிரம்பி வருவதால் எர்ணாகுளத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக கேரளத்தின் மிகப்பெரிய அணையான இடுக்கி  அணை நிரம்பி வருகிறது. நீர்மட்டம் 2,391.04 அடியை எட்டியதை அடுத்து, எர்ணாகுளத்திற்கு நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நீர்மட்டம் உயரும்போது அடுத்தகட்ட எச்சரிக்கை விடுக்கப்படும்.

நீர்மட்டம் 2,398.85 அடியை எட்டும்பட்சத்தில் அணை திறந்து விடப்படும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.