அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உ.பி.: லாரி மோதிய விபத்தில் மூவர் பலி; 4 பேர் படுகாயம்

உத்தரப்பிரதேசத்தில் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலியாகினர். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :16 அக்டோபர் 2020, 10:40 am

DIN

உத்தரப்பிரதேசத்தில் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலியாகினர். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூர் பகுதியில் இருந்து கங்கை நதிக்கு புனித பயணம் செல்வதற்காக சாலையோரம் சிலர் காத்திருந்தனர். அவர்களை வழியனுப்பி வைக்க உறவினர்கள் சிலரும் காத்திருந்தனர்.

அப்போது ஜமானியா கோட்வாலி காவல்நிலையம் அருகே கட்டுபாட்டை மீறி வந்த லாரி ஒன்று சாலையோரம் நின்றிருந்தவர்காள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் 16 வயது சிறுமி உள்பட 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற நான்கு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்தைக் கண்டித்து உள்ளூர் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவதாக நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.

லாரி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.