பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: தீவிரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர்  நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

News image
ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: தீவிரவாதி சுட்டுக்கொலை (கோப்புப்படம்)
Updated On :17 அக்டோபர் 2020, 5:22 am

DIN

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர்  நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜம்மு- காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் பாதுகாப்புப்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அனந்தநாக் மாவட்டத்தின் லார்னோ பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருந்த பகுதியில் பாதுகாப்புப்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதியும் பாதுகாப்புப்படையினரை நோக்கித் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், பாதுகாப்புப்படையினர் பதிலடி கொடுத்தனர். இதில் தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் அவரிடமிருந்து ஏ.கே. -47 ரக துப்பாக்கியையும் வீரர்கள் பறிமுதல் செய்தனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதி எந்த அமைப்பை சேர்ந்தவர் என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை. மேலும் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் பாதுகாப்புப்படையினர் அப்பகுதிகளில் தொடர்ந்து ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.