உ.பி.: வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை
உத்தரப்பிரதேசத்தில் கரோனா பெருந்தொற்று காரணமாக வேலையிழந்த இளைஞர் மீண்டும் வேலை கிடைக்காத விரக்தியில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.


உத்தரப்பிரதேசத்தில் கரோனா பெருந்தொற்று காரணமாக வேலையிழந்த இளைஞர், மீண்டும் வேலை கிடைக்காத விரக்தியில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தின் லபேடா கிராமத்தைச் சேர்ந்த விஜ்னேஷ் யாதவ் என்ற 22 வயது இளைஞர், காசியாபாத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், கரோனா பெருந்தொற்று காரணமாக வேலையிழந்தார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு சொந்த கிராமத்திற்கு வந்த இளைஞர், மற்றொரு வேலைத்தேடி அலைந்துள்ளார். பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்காத விரக்தியில் இளைஞர் கடந்த வியாழக்கிழமை இரவு விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனையடுத்து அவரது பெற்றோர்கள் ஜவர்லால் நேரு மருத்துவமனையில் அவரை அனுமதித்திருந்த நிலையில், இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...