அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உ.பி.யில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் தொடக்கம்

உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வரும் நிலையில், பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை ஆளுநர் ஆனந்திபென் படேல் தொடக்கி வைத்துள்ளார்.

News image
உ.பி.யில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் தொடக்கம் (கோப்புப்படம்)
Updated On :17 அக்டோபர் 2020, 10:41 am

DIN

உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வரும் நிலையில், பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை ஆளுநர் ஆனந்திபென் படேல் தொடக்கி வைத்துள்ளார்.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் பெண் காவலர்கள் இதில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கண்டித்து பல்வேறு மகளிர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் 'பாதுகாப்பான நகரத் திட்டம்' என்ற தலைப்பின் கீழ் 180 நாள்களுக்கு பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெருமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்தினை உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் இன்று (சனிக்கிழமை) துவக்கி வைத்தார்.

பாதுகாப்பான நகரத் திட்டத்தின் கீழ் லக்னெள உள்பட நாட்டின் 8 நகரங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. லக்னெளவில் பெண்களின் பாதுகாப்பிற்காக 100 இளஞ்சிவப்பு நிற இருசக்கர வாகனங்கள் மற்றும் 10 நான்கு சக்கர வாகனங்கள் வழங்கப்படுள்ளன. இதற்காக மத்திய அரசு சார்பில் ரூ.194 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து பேசிய ஆளுநர் ஆனந்திபென் படேல், ''பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதால், அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சமூகத்திற்கு எழுந்துள்ளது. 

சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெண்கள் மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் பெண்கள் சுரண்டப்படுகின்றனர். பெண்கள் அதிகாரம் பெற வேண்டும்.

மக்களில் சிலர் குற்ற எண்ணங்களுடன் உள்ளனர். அவர்கள் எந்தவித தயக்கமுமின்றி குற்றசெயல்களில் ஈடுபடுகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இந்தத் திட்டம் தொடக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.