உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பெங்களூருவில் கனமழை: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.25,000 நிவாரணம்

பெங்களூருவில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25,000 நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

News image
பெங்களூருவில் கனமழை: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.25,000 நிவாரணம் (கோப்புப்படம்)
Updated On :24 அக்டோபர் 2020, 9:50 am

DIN

பெங்களூருவில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25,000 நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த இரண்டு நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பெங்களூரு நகரின் முக்கிய சாலைகள் உள்பட பல்வேறு சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மேலும் பல்வேறு இல்லங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வெள்ளத்தால் உணவு, உடை போன்ற அடிப்படை தேவைகளை இழந்த குடும்பத்தினருக்கு ரூ.25,000 நிவாரணமாக வழங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியுரப்பா கூறினார்.

இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன். கனமழையால் தற்போது ஏற்பட்டுள்ள இழப்புகளைப் போன்று மீண்டும் ஏற்படாமல் இருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று முதல்வர் உறுதியளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.