ஒடிசாவில் 1,547 பேருக்கு கரோனா தொற்று: 11 பேர் பலி

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,547 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
Odisha reports 1,547 new COVID-19 cases, 11 more fatalities
Odisha reports 1,547 new COVID-19 cases, 11 more fatalities

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,547 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,547 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,88,646-ஆக அதிகரித்துள்ளது. 

இதில் கரோனா தொற்றால் 15,247 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை தொற்று பாதித்து குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 2,72,038-ஆக அதிகரித்துள்ளது. 

புதிதாக 11 பேர் பலியானதால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,308 -ஆக அதிகரித்துள்ளது. 

ஒடிசா மாநிலத்தில் இதுவரை 45.08 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 44,506 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com